Kaduwela, Sri lanka.

ஷ்ரத்தா சமூக நல பிரிவு

ஒரு உயிருக்கு மரணத்தை பார்க்க கொடிய பயம் வேறு எதுவம் இல்லையென்றே கூறலாம். பிறப்புக்கும் போதே உடமையாகும் இந்த மரணபயம் அந்த உயிர்களை எவ்வளவு பயத்திற்குள்ளாக்கிறது என்பதனை அந்த உயிர்கள் மரணத்தருவாயில் படும்பாட்டை வைத்தே உணர்ந்துக்கொள்ளலாம். சிறு சப்தத்திற்கு கூட திடுக்கிடும் வாழ்வினைக் கொண்டுள்ள அந்த உயிர்களுக்கு சிறு உபகாரமாவது செய்வதற்கு மனிதர்களாகிய எம்மால் மாத்திரமே. உலகெங்கிலும் பல்வேறு காரணங்களினால் ஒரு நாளைக்குள் கோடிக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.. உணவுக்காக மாத்திரமே மாடுகள், கோழியினங்கள், மீன்கள் எனும் உயிர்கள் கோடிக்கணக்காக கொல்லப்படுகின்றன. இன்னும் பல மிருகங்கள் மனிதர்களின் கைதிகளாக வாழ்கின்றன. இவ் அனைத்து உயிர்களுக்கும் அபயமே (பயமின்மையே) அவசயமாகின்றது. சில நொடிகளுக்காவது அந்த உயிர்களுக்கு உயிர் வாழ்வதற்கு அவகாசம் அளிக்க முடியுமானால், விடுதலையளிக்க முடியுமானால் அது மாபெரும் புண்ணியமாகும். அந்த மகா புண்ணியத்தின் விளைவினால் நீண்ட ஆயுளுடன் கூடிய வாழ்வு உடமையாகும். என்றாவது ஒருநாள் இந்த பிறவிப்பயணத்திலிருந்து நீங்குவதற்கும் அந்த புண்ணியங்கள் பெரும் உபகாரமாக அமையும்.

+ 0
அபயதான நிகழ்ச்சிகள்
0
அபயதானம் பெற்ற உயிர்கள்

எம்முடன் வாருங்கள்

நாமே செய்துகொள்கின்ற கர்மங்களுக்கு அமைவாக சில பிப்புகளில் சுகம் நிறைந்த சுவர்க்கலோகங்களிலும் வேறு சில பிறப்புகளிலும் துன்பங்கள் நிறைந்த நரகலோகங்களிலும் பிறந்துகொண்டு பயணிப்பதே இந்த பிறவிப்பயணமாகும். இத்தகைய இழி பிறவிப்பயணத்தில் பயணிக்கும் நாம் எண்ணிலடங்காத பிறப்புகளில் நரகத்திற்குரிய மிருகலோகங்களிலும் பிறந்துள்ளோம். இன்று எம் கண் முன்னால் அப்பாவி உயிர்கள் அனுபவிக்கும் அதே பயத்தினை நாமும் அனுபவித்துள்ளோம். பல பிறவிகளில் நாமும் ஏனைய விலங்குகளின் பசிக்கு உணவாகியிருப்போம். ஒருவரின் உணவு பாத்திரத்தில் நாமும் ஒரு குழம்பாக இருந்திருப்போம். அந்தளவிற்கு இந்த பிறவிப்பயணம் அபாயகரமானதாகும். பயங்கரமானதாகும். இதனை நாம் அன்புடன் சரணடைந்த எமது புத்த பகவான் பலவாறாக தம் போதனைகளில் மொழிந்தருளியுள்ளார்.

சுதந்திரமான வாழ்க்கை

ஷ்ரத்தா அபயதானத்ன் மூலம், மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் இடங்களுக்கு சென்று மாடுகளை விலைகொடுத்து வாங்கப்படுகின்ற. அவ்வாறு விலைகொடுத்து வாங்கப்படும் அந்த மாடுகளை நம்பகத்தன்மையான ஒரு குழுவிற்கு பாதுகாப்புடன் வளர்ப்பதற்காக விடப்படுகின்றது.

இங்கு இந்த உயிர்களை விலைகொடுத்து வாங்குவதற்கும் அவ்வாறு வாங்கப்படும் மாடுகளை வளர்க்கும் குடும்பங்களுக்கு அளிப்பதற்காக கொண்டு செல்லுதல் எனுமு; இரு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதனடிப்படையில் ஒரு மாட்டை மரணத்திலிருந்து காப்பாற்றி அதனை பாதுகாப்புடன் வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யுமு; வரையிலான செலவு அண்ணளவாக 70 000 ரூபாய் ஆகும். அபயதான புண்ணிய செயற்பாட்டிற்கு பங்குபற்ற விரும்பும் நீங்கள் விரும்பும் பணத்தொகையை அதற்காக அளிக்க முடியும். இவ்வாறாக சேரும் பணத்தைக் கொண்டு ஒரு உயிரோ அல்லது பல உயிர்களோ மரணத்திலிருந்து விடுதலை செய்யப்படுகின்றன.

இதற்காக நீங்கள் பணமளிக்க கூடிய வழிமுறைகள்

071 4371522 අஎனும் எண்ணை தொடர்புகொண்டு கணக்கு விபரங்களை பெற்று பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு அது தொடர்பாக அறியத்தருதல் அவசியமாகும். பணம் வைப்பிலிட்ட பின்னர் கிடைக்கும் ரசீது பத்தரத்தை ஷ;ரத்தா ஊடக வலையமைப்பு, ஹேவாகம, கடுவலை எனுமு; முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது அந்த ரசீது பத்தரத்தை இந்த charity@shraddha.lk மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி அறியத்தருதல் அவசியமாகும். 

எம்முடன் சேருங்கள்

  • தொலைபேசி எண் - 0714 371 522
  • மின்னஞ்சல் - charity@shraddha.lk
  • முகவரி - ஷ்ரத்தா தொலைக்காட்சி,ஹேவாகம, கடுவலை
Contact US

கணக்கு விபரங்கள்

  • பெயர் - ஷ்ரத்தா ஊடக வலையமைப்பு
  • கணக்கு எண் - ACC NO 116261004333
  • சம்பத் வங்கி - கடுவலை கிளை
Acc Details

புதிய அபயதான நிகழ்ச்சிகள்

අභයදානමය පුණ්‍යකර්මය… 2020-10-04

අභයදානමය පුණ්‍යකර්මය… 2020-10-04 ශ්‍රද්ධා අභයදාන පුණ්‍ය ව්‍යාපෘතියට සමගාමීව මරණයට කැප වූ එළගවයින් 31 දෙනෙක් සහ එළුවන් 02 දෙනෙකු නිදහස් කිරීමේ අභයදානමය පුණ්‍ය කර්මයක් ශ්‍රද්ධා නාලිකාව

Read More »

අභයදානමය පුණ්‍යකර්මය… 2020-09-06

අභයදානමය පුණ්‍යකර්මය… 2020-09-06 ශ්‍රද්ධා අභයදාන පුණ්‍ය ව්‍යාපෘතියට සමගාමීව මරණයට කැප වූ එළගවයින් 52 දෙනෙක් සහ එළුවන් 04 දෙනෙකු නිදහස් කිරීමේ අභයදානමය පුණ්‍ය කර්මයක් ශ්‍රද්ධා නාලිකාව

Read More »

අභයදානමය පුණ්‍යකර්මය 2020-08-09

අභයදානමය පුණ්‍යකර්මය 2020-08-09 ශ්‍රද්ධා අභයදාන පුණ්‍ය ව්‍යාපෘතියට සමගාමීව මරණයට කැප වූ එළගවයින් 31 දෙනෙකු සහ එළුවෙකු නිදහස් කිරීමේ අභයදානමය පුණ්‍ය කර්මයක් ශ්‍රද්ධා නාලිකාව සුපිහිටි කඩුවෙල

Read More »