
ශ්රද්ධා අභයදාන 93 වන පුණ්ය ව්යාපෘතිය
ශ්රද්ධා අභයදාන පුණ්ය ව්යාපෘතිය මඟින් සිදු කරනු ලැබූ 93 වන පුණ්ය ව්යාපෘතිය මඟින් මරණයට කැප වූ එළ ගවයින් 24 ක් (අම්මා සහ පැටව් 03,ගැබිණි එළදෙනුන්
ஒரு உயிருக்கு மரணத்தை பார்க்க கொடிய பயம் வேறு எதுவம் இல்லையென்றே கூறலாம். பிறப்புக்கும் போதே உடமையாகும் இந்த மரணபயம் அந்த உயிர்களை எவ்வளவு பயத்திற்குள்ளாக்கிறது என்பதனை அந்த உயிர்கள் மரணத்தருவாயில் படும்பாட்டை வைத்தே உணர்ந்துக்கொள்ளலாம். சிறு சப்தத்திற்கு கூட திடுக்கிடும் வாழ்வினைக் கொண்டுள்ள அந்த உயிர்களுக்கு சிறு உபகாரமாவது செய்வதற்கு மனிதர்களாகிய எம்மால் மாத்திரமே. உலகெங்கிலும் பல்வேறு காரணங்களினால் ஒரு நாளைக்குள் கோடிக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.. உணவுக்காக மாத்திரமே மாடுகள், கோழியினங்கள், மீன்கள் எனும் உயிர்கள் கோடிக்கணக்காக கொல்லப்படுகின்றன. இன்னும் பல மிருகங்கள் மனிதர்களின் கைதிகளாக வாழ்கின்றன. இவ் அனைத்து உயிர்களுக்கும் அபயமே (பயமின்மையே) அவசயமாகின்றது. சில நொடிகளுக்காவது அந்த உயிர்களுக்கு உயிர் வாழ்வதற்கு அவகாசம் அளிக்க முடியுமானால், விடுதலையளிக்க முடியுமானால் அது மாபெரும் புண்ணியமாகும். அந்த மகா புண்ணியத்தின் விளைவினால் நீண்ட ஆயுளுடன் கூடிய வாழ்வு உடமையாகும். என்றாவது ஒருநாள் இந்த பிறவிப்பயணத்திலிருந்து நீங்குவதற்கும் அந்த புண்ணியங்கள் பெரும் உபகாரமாக அமையும்.
நாமே செய்துகொள்கின்ற கர்மங்களுக்கு அமைவாக சில பிப்புகளில் சுகம் நிறைந்த சுவர்க்கலோகங்களிலும் வேறு சில பிறப்புகளிலும் துன்பங்கள் நிறைந்த நரகலோகங்களிலும் பிறந்துகொண்டு பயணிப்பதே இந்த பிறவிப்பயணமாகும். இத்தகைய இழி பிறவிப்பயணத்தில் பயணிக்கும் நாம் எண்ணிலடங்காத பிறப்புகளில் நரகத்திற்குரிய மிருகலோகங்களிலும் பிறந்துள்ளோம். இன்று எம் கண் முன்னால் அப்பாவி உயிர்கள் அனுபவிக்கும் அதே பயத்தினை நாமும் அனுபவித்துள்ளோம். பல பிறவிகளில் நாமும் ஏனைய விலங்குகளின் பசிக்கு உணவாகியிருப்போம். ஒருவரின் உணவு பாத்திரத்தில் நாமும் ஒரு குழம்பாக இருந்திருப்போம். அந்தளவிற்கு இந்த பிறவிப்பயணம் அபாயகரமானதாகும். பயங்கரமானதாகும். இதனை நாம் அன்புடன் சரணடைந்த எமது புத்த பகவான் பலவாறாக தம் போதனைகளில் மொழிந்தருளியுள்ளார்.

ශ්රද්ධා අභයදාන පුණ්ය ව්යාපෘතිය මඟින් සිදු කරනු ලැබූ 93 වන පුණ්ය ව්යාපෘතිය මඟින් මරණයට කැප වූ එළ ගවයින් 24 ක් (අම්මා සහ පැටව් 03,ගැබිණි එළදෙනුන්

ශ්රද්ධා අභයදාන පුණ්ය ව්යාපෘතිය මඟින් සිදු කරනු ලැබූ 92 වන පුණ්ය ව්යාපෘතිය මඟින් මරණයට කැප වූ එළ ගවයින් 08ක් (අම්මා සහ පැටව් 01,ගැබිණි එළදෙනුන් 01

ශ්රද්ධා අභයදාන පුණ්ය ව්යාපෘතිය මගින් සිදු කරනු ලැබූ 91 වන පුණ්ය ව්යාපෘතිය මගින් මරණයට කැප වූ එළ ගවයින් 24ක් (අම්මා සහ පැටව් 04,ගැබිණි එළදෙනුන් 09